சிறுத்தை நடமாட்டம்; வனத்துறையினர் எச்சரிக்கை

மாரண்ட அள்ளி அருகே உள்ள புதுர் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், கவனமுடன் இருக்குமாறு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-12-07 14:09 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தர்மபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அருகே உள்ள புதுர் கிராமத்தில் சிறுத்தைகள் இருப்பதாக பாலக்கோடு வனத்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜ் மற்றும் வனத்துறையினர் புதுர் கிராமத்திற்க்கு சென்று சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர்.

அதில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர், சிறுத்தைகளை பிடிக்க வனவர் தலைமையில் தனிக்குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர். சிறுத்தை பிடிபடும் வரை பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் தனியாக வெளியே நடமாட வேண்டாம் எனவும், வீட்டிற்க்கு வெளியே படுத்து தூங்க வேண்டாம் எனவும், வீட்டிற்க்குள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை செய்தனர். சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து தெரிய வந்தால் உடனடியாக பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜ் கேட்டு கொண்டுள்ளார்.

Tags:    

Similar News