மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்

மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-11-29 16:12 GMT

தப்பியோடிய கைதி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மதுரை மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்.இவர் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வந்தார். அவருடைய நன்னடத்தை நடவடிக்கைகள் காரணமாக கடந்த சில மாதங்களாக சிறை வளாகத்தில் தோட்ட வேலைகள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று மதியம் சிறை வளாகத்தினுள் உள்ள தோட்ட வேலையில் ஜெயக்குமார் உள்ளிட்ட சில கைதிகள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். வேலை முடிந்து மாலை சிறைக்குச் செல்லும்போது அதில் ஜெயக்குமாரை மட்டும் காணவில்லை. உடனே சிறை காவலர்கள் அவரை அங்குள்ள பகுதி முழுவதும் தேடிப் பார்த்தனர். ஆனால் அவர் எங்கும் கிடைக்காததால் ஜெயக்குமார் தப்பி சென்றது தெரியவந்தது.

உடனே இதுகுறித்து சிறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கரிமேடு போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கைதி ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வருகிறார்கள். மதுரை மத்திய சிறையில் சிறை கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News