அச்சரப்பாக்கம் அருகே டாஸ்மாக்கில் மதுபாட்டில்கள் கொள்ளை; மர்ம கும்பல் கைவரிசை!!

அச்சரப்பாக்கம் அருகே மதுக்கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-07-09 05:15 GMT

Tasmac

அச்சரப்பாக்கம் அருகே பெரும் பேர்கண்டிகை டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இரவு வழக்கம் போல் விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டி சென்றனர். அதிகாலை 2.30 மணி அளவில் மர்ம கும்பல் மதுக்கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த லாக்கரை உடைக்க முயன்றும் முடியாததால் மதுபாட்டில்களை பெரிய பையில் அள்ளினர். அந்த நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் அப்பகுதியில் வாகனத்தில் ரோந்து வந்தனர். உடனே மதுக்கடையில் இருந்த கும்பல் அங்கிருந்து மதுபாட்டில்களுடன் தப்பி ஓட்டம் பிடித்தனர். போலீசார் பிடிக்க முயன்றும் முடிய வில்லை. போலீசார் மதுக்கடைக்குள் வந்து பார்த்தபோது அங்கிருந்த லாக்கரை கொள்ளையர்கள் உடைக்க முயன்று இருப்பது தெரிந்தது. மேலும் கடையில் மின் இணைப்பை துண்டித்தும், கண்காணிப்பு காமிராவை உடைத்தும் கைவரிசை காட்டி உள்ளனர். லாக்கரை உடைக்க முடியாததால் மதுபாட்டில்களை பையில் அள்ளி சென்று உள்ளனர். கொள்ளையர்கள் தப்பி ஓடியபோது ஒரு பையில் இருந்த மதுபாட்டில்களை விட்டு சென்று இருக்கிறார்கள். மேலும் அவர்கள் அணிந்து இருந்த 2 சட்டைகளையும் விட்டுச் சென்றுள்ளனர். இதனை கைப்பற்றி போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள். லாக்கரில் ரூ.12 லட்சம் விற்பனை பணம் இருந்தது. லாக்கரை உடைக்க முடியாததால் அந்த பணம் தப்பியது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்துஇருந்த ரேகைகளை ஆய்வு செய்தனர். இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News