நாகை அருகே கள்ளச்சாராய பாட்டில்கள் பறிமுதல் : இருவர் கைது

நாகை அருகே காரில் கடத்து வரப்பட்டமது கள்ளச்சாராய பாட்டில்கள், காரை பறிமுதல் செய்து போலீரார் 2 பேரை கைது செய்தனர்.

Update: 2024-04-09 03:37 GMT

நாகை அருகே காரில் கடத்து வரப்பட்டமது கள்ளச்சாராய பாட்டில்கள், காரை பறிமுதல் செய்து போலீரார் 2 பேரை கைது செய்தனர்.


நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் வெளிப்பளையம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக வெளிமாநில மது கடத்தல் குற்றத்தில் நாகை பச்சை பிள்ளையார் கோயில் தெரு முகமது மைதீன் மனைவி ரேவதி (35) புதுச்சேரி மாநிலம் காரைக்கால மாவட்டம் திருநள்ளாரு அல்லா பிச்சை மகன் சர்புதீன்(60) ஆகிய இரண்டு நபர்களை கைது செய்தும் அவர்களிடமிருந்து 90 ML அளவுள்ள 400 பாண்டி மது பாட்டில்கள், மற்றும் கடத்துலுக்கு பயன் படுத்தப்பட்ட ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
Tags:    

Similar News