அனுமதியின்றி விற்பனை செய்த மதுபாட்டில்கள் பறிமுதல்

தாரமங்கலத்தில் அனுமதியின்றி விற்பனை செய்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2024-04-08 05:02 GMT

மதுபாட்டில்கள் பறிமுதல்

சிவகங்கை மதுவிலக்கு தேர்தல் கண்காணிப்பு குழு கோட்ட அலுவலர், தாசில்தார் குமார் பாலகிருஷ்ணன் தாயமங்கலம் கோயில் அருகே உள்ள பகுதிகளில் ரோந்து சென்ற போது காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி, தாயமங்கலம் பகுதியைச் சேர்ந்த சேகர் ஆகியோர் அனுமதியில்லாமல் மது விற்பனை செய்தது தெரியவந்த நிலையில் அவர்களிடமிருந்து 90 மதுபாட்டில், ரூபாய் 70 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது
Tags:    

Similar News