ராமநாதபுரம் : மது பாட்டில் விற்பனை செய் ஒருவர் கைது

ராமநாதபுரம் அருகே விதிகளை மீறி சட்ட விரோதமாக மதுவிற்றவரை கது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 656 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-01-26 01:31 GMT

மதுவிற்றவர்

ராமநாதபுரம் தமிழக அரசின் உத்தரவின் பேரில் வள்ளலார் தினத்தை முன்னிட்டு மதுபான கடைகள் இன்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் பேராவூர் நான்கு முனை சந்திப்பு அருகே மதுபான விற்பனை நடைபெறுவதாக கேணிக்கரை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் போலீசார் சோதனை செய்து வந்தனர். அப்போது மதுபான கடை அருகே பாரில் மது பாட்டில் விற்ற அலாவுதீனை கெணிக்கரை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து 656 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பாரின் உரிமையாளர் சண்முக சுந்தரத்தை கேணிக்கரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News