தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்.21, மற்றும் மே 1ஆம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-04-17 11:21 GMT

மதுக்கடைகள் மூடல் 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்.21, மற்றும் மே 1ஆம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகள், மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில், மகாவீர் ஜெயந்தி (நாள்: 21.04.2024) மற்றும் மே தினம் (நாள்: 01.05.2024) ஆகிய தினங்களை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை / பார்) விதிகள் 2003 விதி 12 துணை விதி (1)-ன் படி அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் எப்.எல்2, எப்.எல்3 உரிமதலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட தினங்களில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியபட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ் நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News