சாராயம் கடத்தியவர் கைது

ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியவரை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.

Update: 2024-02-11 06:20 GMT

கைது 

ஆத்தூர் போலீசார் காட்டுக்கோட்டை முயல் கரடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ராமசேஷபுரத்தை சேர்ந்த குமாரசாமி மகன் ரவிச்சந்திரன் (வயது 36) என்பவர் மோட்டார் சைக்கிளில் 119 லிட்டர் சாராயத்தை கடத்தியது தெரிய வந்தது. போலீசார் அவரை துரத்தி சென்று கைது செய்தனர். அவரிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News