மயிலம் தமிழ் கலைக்கல்லூரியில் இலக்கிய பயிற்சி பாசறை நிகழ்ச்சி

மயிலம் தமிழ் கலைக்கல்லூரியில் இலக்கிய பயிற்சி பாசறை நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-01-20 05:32 GMT


மயிலம் தமிழ் கலைக்கல்லூரியில் இலக்கிய பயிற்சி பாசறை நிகழ்ச்சி நடந்தது.


தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் இளையோர் இலக்கிய பயிற்சி பாசறை நிகழ்ச்சி ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதற்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினர். கல்லூரி செயலாளர் ராஜூவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு வர வேற்றார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பு அலுவலர் கவிஞர் நெல்லை ஜெயந்தா, உரத்த சிந்தனை சங்கம் பொதுச்செயலாளர் உதயம் ராம், ஊடகவியலாளர் கவிஞர் உதயகிருஷ்ணன், திரைப் பட இயக்குனர் கவிஞர் அழகப்பன், ஆர்.கே.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் பிந்து, கலைமகள் மாத இதழ் ஆசிரியர் கீழ் ஆம்பூர் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் மற்றும் ஆழ்வார் குறிச்சி கவிஞர் சொக்கலிங்கம் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள். இதில் பொம்மையார்பாளையம் சித்தர் சிவஞானி கலைக்கல்லூரி, ஒலக்கூர் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரி, ஒரத்தூர் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரிகளில் இருந்து 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News