எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை திருவிழா

பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ,மாணவிகளை பறை இசைத்து, சிலம்பம் சுழற்றி, கற்கண்டு இனிப்புகள் வழங்கி வரவேற்பளித்தனர்.

Update: 2024-06-11 02:43 GMT

எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை திருவிழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது‌. ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ மாணவிகளை பறை இசைத்து, சிலம்பம் சுழற்றி, கற்கண்டு இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்டது. காலை உணவு வழங்கப்பட்டது. ஆசிரியர் பயிற்றுனர் பானு, சமூக ஆர்வலர் ராகேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் புத்தகங்கள், நோட்டுகள், பயிற்சி ஏடுகள், எழுது பொருள்கள் வழங்கப்பட்டது. மாணவர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது. விழாவில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை உறுப்பினர்கள், சக்கிமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மாலா, லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் விஜயலட்சுமி, அனுசியா, மனோன்மணி, சித்ரா, தமிழ்ச்செல்வி, அகிலா, அம்பிகா, சுகுமாறன் ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை அருவகம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News