மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா

ராமநாதபுரத்தில் பேங்க் ஆப் இந்தியா, சர்வோதயா அறக்கட்டளை சார்பில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2024-06-21 06:16 GMT

கடன் உதவி வழங்கும் விழா

ராமநாதபுரத்தில் நடந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழாவிற்கு பேங்க் ஆப் இந்தியா பொது மேலாளர் மும்பை நகுல பெஹேரா தலைமை வகித்தார். கள பொது மேலாளர் முகேஷ் சர்மா (சென்னை) முன்னிலை வகித்தார். 600 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20 கோடிக்கான காசோலை சர்வோதயா அறக்கட்டளை நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.

சுய உதவிக் குழுக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பேங்க் ஆப் இந்தியா பங்களிப்பு குறித்து மதுரை மண்டல மேலாளர் கிஷோர் குமார் பேசினார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பல்வேறு கடன் திட்டம், நிதி மேலாண் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொது மேலாளர் நகுல பெஹேரா பேசினார். சமூக பாதுகாப்புத் திட்டங்களின் அவசியம் குறித்து பொது மேலாளர் முகேஷ் சர்மா வலியுறுத்தினார்.

Tags:    

Similar News