வட்டார வளர்ச்சி அலுவலகங்களை அணுகி நிவாரணப் பொருட்கள் வழங்கலாம்

Update: 2023-12-20 06:14 GMT

மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன்

தென் மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக தூத்துக்குடி திருநெல்வேலி போன்ற பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அப்பகுதி சார்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வரும் நிலையில, அந்த பகுதி பொதுமக்களுக்கு உதவுவதற்காக  தமிழகம்  முழுவதும் இருந்து பல்வேறு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த பொதுமக்கள் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் கன மழை காரணமாக அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகி இருப்பதால் அம்மாவட்டங்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை கொடுக்க விரும்புவோர் வட்டங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களை அணுகி நிவாரணப் பொருட்களை வழங்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News