மதுரையில் ஊர்க்காவல் படிக்கான ஆட்சேர்ப்பு

மதுரையில் ஊர்க்காவல் படிக்கான ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.

Update: 2024-03-15 16:32 GMT

ஆட்சியர் அறிக்கை

மதுரை மாநகர் ஊர்க்காவல்படைக்கு வருகின்ற மார்ச் மாதம் 20ம் தேதி அன்று மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது, விருப்பமும் சேவை மனப்பான்மையும் கொண்டவர்கள் இதில் சேரலாம், கல்வி தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி மற்றும் தேர்ச்சியின்மை வயது 20 முதல் 40 வரை இருக்க வேண்டும்,

ஆண்களின் உயரம் குறைந்தது 165 சென்டிமீட்டர் ஆக இருக்க வேண்டும், பெண்களின் உயரம் குறைந்தது 155 சென்டி மீட்டர் இருக்க வேண்டும், என்சிசி மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், விருப்பமுள்ளவர்கள் மதுரை தல்லாகுளம் கோகலே ரோட்டில் உள்ள ஊர் காவல் படை அலுவலகத்தில் வருகின்ற 18ம் தேதி காலை 10 மணி முதல் 19ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்,

தேர்வுக்கு வரும் போது சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களும், பாஸ்போர்ட் சைஸ் போட்டா 2, ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்களுடன் வரவேண்டும், என மதுரை மாநகர ஊர் காவல் படை வட்டார தளபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்,

Tags:    

Similar News