காரைக்குடி-நாகர்கோவிலுக்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள்..! மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு..!!

சென்னையிலிருந்து காரைக்குடி, நாகர்கோவிலுக்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

Update: 2023-10-21 05:47 GMT

பண்டிகை கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து நாகர்கோவில் மற்றும் காரைக்குடி ரயில் நிலையங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, காரைக்குடி சிறப்பு ரயில் (06039) டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அக்டோபர் 22 அன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.30 மணிக்கு காரைக்குடி சென்று சேரும். மறு மார்க்கத்தில் அக்டோபர் 23 அன்று காரைக்குடியில் இருந்து இரவு 09.30 மணிக்கு புறப்படும்  சிறப்பு ரயில் (06040) மறுநாள் காலை 09.00மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும். இந்த ரயில்கள் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுக சந்திப்பு, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் இரண்டு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், ஆறு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், நான்கு குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், ஆறு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

அதேபோல் சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06046) நாகர்கோவிலில் இருந்து அக்டோபர் 24 அன்று இரவு 07.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில் பகல் நேர சிறப்பு ரயில் (06045) சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 25 அன்று காலை 10.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும் இந்த ரயில்கள் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஐந்து குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், பதினொரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் இரண்டு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டியுடன் கூடிய சரக்கு பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும் என்று மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News