மதுரை வீரன் கோவில் இரும்பு கேட் களவாடிய வாலிபர் கைது

தாந்தோணி மலை மதுரை வீரன் கோவில் இரும்பு கேட் களவாடிய வாலிபர் செய்யப்பட்டார்.

Update: 2023-12-19 08:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மதுரை வீரன் கோவில் இரும்பு கேட் களவாடிய இளைஞர் கைது. கரூர் மாவட்டம், தாந்தோணிமலை வேலகவுண்டநகர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி வயது 67. கொத்தனார். இவர், ராயனூர் வசந்தம் நகரில் உள்ள மதுரை வீரன் கோவில் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். கோவில் பராமரிப்பு வேலைகள் நடைபெற்று, கோவில் முன்பு இரும்பு கேட் அமைக்கப்பட்டிருந்தது. பணிகளை முடித்துவிட்டு டிசம்பர் 14ஆம் தேதி வழக்கம் போல் வீடு திரும்பினார் கணபதி. அன்றைய தினம் இரவு எட்டு மணி அளவில் இரும்பு கேட்டை, தாந்தோணி மலை NGGO நகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் திருச்செஸ்வரன் களவாடியதை பார்த்த கணபதி, இது குறித்து தாந்தோனிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில்,சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இரும்பு கேட்டை களவாடிய திருச்செஸ்வரனை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.

Tags:    

Similar News