கரூரில் ஸ்ரீ மகா பெரியவாள் சன்னிதானத்தில் மகா கும்பாபிஷேக விழா

கரூரில் ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவாள் சன்னிதானத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-04-21 11:18 GMT

சிறப்பு யாகம்

கரூரில் ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவாள் சன்னிதானத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, மேட்டு தெருவில் அமைந்துள்ள அபய பிரதான ரங்கநாத சுவாமி திருக்கோவில் பின்புறம், புதிதாக கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவாள் திருமாடலய திருப்பணிகள் துவக்கப்பட்டது.

அந்த பணிகள் நிறைவடைந்தது முன்னிட்டு, இன்று காலை மாடலயத்தில் கும்பாபிஷேகம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பெரியவாள் திருமேனிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் நடைபெற்றது. புரோகிதர்கள் இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தி முடித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் உள்ள பொதுமக்கள், பக்தர்கள், ஆன்மீகவாதிகள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் வழங்கினர்.

Tags:    

Similar News