செல்வலிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரிவிழா கோலாகலம்

அக்கரைப்பட்டி வாய்க்கால்கரை செல்வலிங்கேஸ்வரர் கோவிலில் 3ம்ஆண்டு மகா சிவராத்திரிவிழா கோலாகலத்துடன் நடந்தது.

Update: 2024-03-09 10:46 GMT

செல்வலிங்கேஸ்வரர் கோவில்

மல்லசமுத்திரம் அருகே அக்கரைப்பட்டி வாய்கால்கரையில் உள்ள பிரசித்திபெற்ற செல்வநாயகி அம்மன் உடனுறை செல்வலிங்கேஸ்வரர் கோவிலில் 3ம்ஆண்டு மகா சிவராத்திரிவிழா நேற்று நடந்ததையொட்டி கடந்த 5ம்தேதி மாலை 6மணிக்கு காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது. 7ம்தேதி மாலை 4மணிக்கு, சுவாமி அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் திருவீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் மாலை 4மணிக்கு அக்கரைப்பட்டி திருமணிமுத்தாற்றில் இருந்து தீர்த்தகுடம் அழைத்து ஊர்வலகமாக வந்து கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து மாலை 6மணிக்கு முதற்கால யாகபூஜையும், இரவு 9.30மணிக்கு இரண்டாம்கால யாகபூஜையும், இரவு 12மணிக்கு மூன்றாம்கால யாகபூஜையும், அதிகாலை 3மணிக்கு நான்காம்கால யாகபூஜையும் நடந்தது. நேற்று அதிகாலை 5.30க்கு சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து, புஷ்பஅலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வழிபாட்டு சென்றனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News