கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம்

திண்டுக்கல் மாவட்டம், மஞ்சநாயக்கம்பட்டியில் கிணற்றில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-06 10:19 GMT
பலி

பழனியை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டியைச்  சோந்தவர் கருப்புச்சாமி (85). இவர் கடந்த 1ஆம் தேதி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர்.

நேற்று அதே ஊரை சோந்த வெள்ளைச்சாமி தோட்டத்து கிணற்றில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது.போலீசார் விசாரனையில் இறந்த நபர் கருப்புசாமி என தெரியவந்தது . இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News