காவேரி ஆற்றில் அடையாளம் தெரியாத வாலிபர் சடலமாக மீட்பு
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியத்தில் உள்ள காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
ஆண் சடலம் மீட்பு
திருச்சி மாவட்டம் ,தொட்டியம் காவிரி ஆற்ற்றில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சடலமாக கிடைப்பதாக தொட்டியம் கிராம நிர்வாக அலுவலர் கௌரிக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்க்கு சென்று சடலமாக கிடந்த வாலிபர் குறித்து விசாரணை செய்தார்.
ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தொட்டியம் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் கௌரி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தொட்டியம் போலீசார் இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இறந்தார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.