தினசரி குடிநீர் விநியோகம் - மல்லசமுத்திரம் பொதுமக்கள் கோரிக்கை

திருச்செங்கோடு அருகே, மல்லசமுத்திரம் பேரூராட்சி பகுதியில் தினசரி காவிரி குடிநீர் வழங்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-10-19 04:44 GMT

இரவில் குடிநீர் விநியோகத்தால் அவதி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மல்லசமுத்திரம் பேரூராட்சி 1வது வார்டு பகுதியான அம்மாபட்டியில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். இங்கு காவிரி குடிநீர் 15 நாளுக்கு ஒரு முறை இரவு நேரத்தில் குடிநீர் வருவதால் தினசரி குடிப்பதற்கு போதிய குடிநீர் இல்லாதால் பெரும் சிரமத்தை சந்தித்து விலைக்கு வாங்கி பயன்படுத்தி வரும் நிலையில் உள்ளனர். எனவே, தினமும் காவிரி குடிநீர் வழங்க வேண்டும். போதிய குடிநீர் வசதி ஏற்படுத்த தர பேரூராட்சி நிர்வாகம் தலையிட வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



தினசரி குடிநீர் விநியோகம் வழங்க மல்லசமுத்திரம் பொதுமக்கள் கோரிக்கை 

Tags:    

Similar News