குடிநீர் திட்ட மேற்பார்வையாளரை தாக்கியவர் கைது
By : King 24X7 News (B)
Update: 2023-11-07 09:15 GMT
கோப்பு படம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கான்குலத்தான் தெருவை சேர்ந்தவர் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 27). குடிநீர் திட்ட மேற்பார்வையாளர். இவர் சம்பவத்தன்று இரவு கண்ணமங்கலம் காட்டுகாநல்லூர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
பைக்கில் எதிரே வந்த காட்டுக்கா நல்லூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் பார்த்திபன் ஓட்டி வந்து பைக் மீது மோதுவது போல சென்றதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார், பார்த்திபனை ஆபாசமாக பேசி தனது கையில் வைத்திருந்த பேனா கத்தியால் அவரை குத்தியுள்ளார்.
இதில் பார்த்திபன் காயம் அடைந்தார். இதுகுறித்து அவர் கண்ணமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.