சாராயம் விற்பனை செய்த நபர் கைது!
தச்சம்பட்டு அருகே சாராயம் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-05-29 07:23 GMT
திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அடுத்த வேலையாம்பாக்கம் கலர்கொட்டாய் பகுதியில் காவல் ஆய்வாளர் கமல்ராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் பின் பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மணிவேல் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயம் மற்றும் 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.