சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது !
விருகம்பாக்கம் அருகே சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
Update: 2024-03-18 10:55 GMT
விருகம்பாக்கம் இந்திரா நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவன் ஜெய்கணேஷ் 30 பெயின்டராக வேலை செய்து வருகிறான் இவன் நெற்குன்றம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்ற போது அங்கு வந்த ஏழு வயது சிறுமியிடம் தனது உடையை கழற்றி விட்டு சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட முயற்சி செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்து நிலையில் இது குறித்து கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் கோயம்பேடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சிறுமியிடம் ஜெய்கணேஷ் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.