பிரதமருக்கு கருப்பு கொடி காட்டவிருந்த நபர் கைது

பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவதாக இருந்த சென்னிமலையை சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-02-27 09:28 GMT

பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவதாக இருந்த சென்னிமலையை சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் போலீசார் கைது செய்தனர்.

இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க தவறி மத்திய அரசை கண்டித்தும் , காவிரி டெல்டா பகுதிகளக பாலைவனமாக்கும் திட்டமான ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதை கண்டித்தும் , மழைப்பாதிப்புகளுக்கு நிவாரண உதவி வழங்காத மத்திய அரசு கண்டித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் இன்று பல்லடம் வரும் மோடிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் அறிவித்த இருந்தனர். இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலனை இன்று காலை சென்னிமலையில் அவரது இல்லத்தில் சென்னிமலை காவல்துறையினர் கைது செய்தனர்
Tags:    

Similar News