சிறுமியிடம் 14 கிராம் தங்க செயின் பறித்தவர் கைது

கோவில்பட்டியில் சிறுமியிடம் 14 கிராம் தங்க செயின் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-27 10:09 GMT

கைது

தூத்துக்குடி மாவட்டம் ,கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி செந்தில் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் இவரது மகள் லட்சுமி பிரபா (36). இவரது மகள் ஹரிணி. கடந்த 21ந்தேதி கோவில்பட்டி ராஜ் மஹால் பகுதியில் லட்சுமி பிரபா தனது மகளுடன் நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் ஹரிணி கழுத்தில் அணிந்திருந்த 14 கிராம் தங்க செயினை பறித்துச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து லட்சுமி பிரபா கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜூவ் நகர் 6வது தெருவை சேர்ந்த ரத்தினவேல் என்வர் நகை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News