உடல்நலக்குறைவால் ஆண் விஷம் அருந்தி தற்கொலை
தேவகோட்டை அருகே தங்கி வேலை செய்து வந்த நிலையில் உடல்நலக்குறைவால் ஆண் விஷம் அருந்தி தற்கொலை - போலீசார் விசாரணை;
By : King 24x7 Angel
Update: 2024-01-24 09:27 GMT
உடல்நலக்குறைவால் ஆண் விஷம் அருந்தி தற்கொலை
காளையார்கோயில் அருகேயுள்ள புலியடிதம்பத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (55). இவர் 8 ஆண்டுகளாக தேவகோட்டை அருகே மருத்தாணி தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் பாய்ச்சும் போது கீழே விழுந்ததில் விஸ்வநாதன் காயமடைந்தார். அவருக்கு சிகிச்சை செய்த போதிலும் வலி இருந்தது. வலி தாங்காமல் அவதிப்பட்ட விஸ்வநாதன் பூச்சிக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்து, மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்