ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே வடமாநில நபர் தற்கொலை

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே வட மாநில இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2024-02-02 10:16 GMT

தற்கொலை செய்து கொண்ட மரம்

 திருப்பத்துர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள 50 அடி மரத்தில் 30வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் ஜோலார்பேட்டை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் விரைந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அதன் பிறகு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு ஜோலார்பேட்டை போலீசரிடம் ஒப்படைத்தனர்.

அதன் பிறகு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஜோலார்பேட்டை போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் அதிக ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர் யார்? அவர் எந்தப் பகுதியை சார்ந்தவர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனை தொடர்ந்து முதல் கட்ட விசாரணையில் வட மாநிலத்தைச் சார்ந்தவராக இருக்க கூடும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் அதிக ஆட்கள் நடமாட்டம் உள்ள ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News