டூவீலர் மீது கார் மோதி விபத்து ஒருவர் படுகாயம்

கரூர் மாவட்டம், மொசப்பட்டி அருகே இருசக்கர வாகனம் மோதி இளைஞர் காயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-06 11:39 GMT

டூவீலர் மீது கார் மோதி விபத்து 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா,மேற்கு ராஜபுரம் கடைவீதி பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல் வயது 55. இவர் ஜனவரி 2ஆம் தேதி மாலை 4:30 மணி அளவில், திண்டுக்கல் - கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் மலைக்கோவிலூர் மொசப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் காரை ஓட்டி வந்த நாகர்கோவில் ஜெரின் கிறிஸ்டோபர் மகன் ரோஷன் வயது 24 என்பவர் மணிவேல் ஓட்டிச் சென்ற டூ வீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மணிவேலுக்கு வலது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அறிந்த மணிவேலின் மனைவி சரோஜாதேவி இது குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய, ரோஷன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News