கஞ்சா கடத்தலில் ஈடுப்பட்ட நபர் கைது !
ஆர்.கே.பேட்டையில் 1.2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Update: 2024-04-08 08:49 GMT
ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் சாலையில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடன் அந்த மார்க்கத்தில் வாகன தணிக்கையை போலீசார் தீவிரப்படுத்தினர். இதில், கர்லம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் சந்தேகப்படும் விதமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர், அவர் 1.2 கிலோ கஞ்சாவை மறைத்து எடுத்து செல்வது தெரிந்தது. இருசக்கர வாகனத்துடன், கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த நபர், கர்லம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சந்திரபிரகாஷ், 21, என தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.