மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், சம்மட்டிவிடுதியில் மணல் கடத்தலில் ஈடுப்பட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-06-02 05:47 GMT

கைது

ஆலங்குடி அருகே சம்மட்டிவிடுதியில் சிலர் பைக்கில் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக சம்மட்டிவிடுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பைக்கில் சாக்கு மூட்டையில் மணல் கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்(45) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மணல் மூட்டைகள் பைக் ஆகிவற்றை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News