காவேரி -வைகை நதிகளின் மாநில செயற்குழு கூட்டம்

காவேரி - வைகை - குண்டாறு - கிருதுமால் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்பு

Update: 2024-03-11 12:21 GMT

காவிரி நதி செயற்குழு கூட்டம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆஞ்சநேயர் கோவில் உள்ளரங்கத்தில் காவேரி - வைகை - குண்டாறு - கிருதுமால் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலச் செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசு காவிரி வைகை குண்டாறு, கிருதுமால் ஆகிய பகுதிகளுக்கு நிதி ஒதுக்காதது கண்டனத்திற்குரியது என தீர்மானம் நிறைவேற்றினர்.

மேலும் தென் மாவட்டத்தில் வேளாண் தொழில் அழிந்து கொண்டிருப்பதற்கு காரணமாக இருக்கக்கூடிய காட்டு பன்றிகளை அழிக்க போர்க்கால நடவடிக்கை இல்லை என்றும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் யூகலிப்டஸ், கருவேல மரங்களை அகற்றாதது கண்டனத்துக்குரியது என்றும், குற்றம் சாட்டினார். இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News