ராசிபுரத்தில் மநீம 7ஆம் ஆண்டு கொடியேற்று விழா

ராசிபுரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் 7 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது.

Update: 2024-03-05 11:11 GMT

கொடியேற்று விழாவில் கலந்து கொண்டவர்கள் 

மக்கள் நீதி மய்யத்தின் 7 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட ராசிபுரம் சட்டமன்ற மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் அரிமா.JP J. ஜெயபிரகாஷ் MJF அவர்களின் தலைமையில், மாவட்ட பொருளாளர் திரு. S.மணி மாணிக்கவாசகம் துணைச் செயலாளர் கள் அரிமாJ.சிவானந்தம் அரிமா. நவாஸ் பாபு, NTSP மாநில துணை செயலாளர் Rtn.A. ராஜு ஆகியோர் முன்னிலையில் ராசிபுரம் நகரில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் ரமேஷ், சுரேஷ் பொன்.பாலச்சந்தர் பூபதி, ராசிபுரம் ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட நற்பணி இயக்க பொறுப்பாளர் .G.கௌதம்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் JC.R.சுகந்தகுமார் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் Rtn.R.ஹரி கிருஷ்ணன் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கோமதி முருகேசன், நிர்மலா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்கள்.

Tags:    

Similar News