பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருது

பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பதை மே 1ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-02 08:40 GMT
ஆட்சியர் தீபக் ஜேக்கப்

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மீண்டும் மஞ்சப்பை " பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை அமைச்சர் சட்டபேரவையில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒருமுறை பயன்படுத்திதூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு "மஞ்சப்பை விருதுகள் ” வழங்கப்படும் என அறிவித்தார்.

இதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணிப்பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச் சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் மாநிலத் சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும். விருதுபெறுவோர்களுக்கு, முதல்பரிசாகரூ.10 லட்சமும். இரண்டாம் பரிசாக ரூ. 5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3லட்சமும் வழங்கப்படும்.

இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தால், பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன் மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் < https://thanjavur. nic.in/> பதிவிறக்கம்செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பபடிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர், நிறுவன தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு (CD) பிரதிகள் இரண்டினை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மே 1ம்தேதி ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News