எருமப்பட்டி அருகே மாரத்தான் போட்டி

எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டி பட்டியில் ரெட் ரோஸ் ப்ரெண்ட்ஸ் கிளப் மற்றும் கலாம் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடந்த  மாரத்தான் போட்டியில் ஏளனமான மாணவர்கள் கலந்துகொண்டு பந்தய தூரத்தை எட்டினர்.

Update: 2024-01-17 02:08 GMT
மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த போது எடுத்த படம்
எருமப்பட்டி ஜனவரி 17 எருமப்பட்டி அருகே உள்ள பொட்டி ரெட்டி பட்டி ஊராட்சி பொன்னேரி கைகாட்டியில் இருந்து புதுக்கோட்டை சென்று மீண்டும் பொன்னேரி கைக்காட்டி வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சென்று வர மாபெரும் மரத்தான் போட்டி நடைபெற்றது  இம் மரத்தான் போட்டியை போட்டுரெட்டிபட்டி  ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுரேஷ் துவக்கி வைத்தார் இதில் பொட்டி ரெட்டிபட்டி பொன்னேரி எருமைப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 150 மாணவர்களும் 75 பெண்களும் கலந்து கொண்டனர் ஆண்களுக்கான மரத்தான் போட்டியில் சுரேந்தர் முதலிடமும் மாலீஸ்வரன் இரண்டாம் இடமும் நேதாஜி மூன்றாம் இடமும் பிடித்தனர் மாணவிகள் பிரிவில் நதியா முதலிடமும் மிதிரா இரண்டாம் இடமும் மனிஷா மூன்றாம் இடமும் பெற்றனர் வெற்றி பெற்றவர்களுக்கு பார் வியூ அகடாமி தலைவர் எஸ்கே வேலு மற்றும் கட்டிட உரிமையாளர் சங்க தலைவர் ஜெகதீசன் பரிசுகளையும் பதக்கங்களையும் வழங்கினார்கள் நடுவர்களாக பொட்டிரெட்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் நடராஜன் மற்றும் விமல் மனோகரன் சரவணன் நித்தியாமற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை விழா குழு உறுப்பினர்கள் செய்திருந்தார்கள்.
Tags:    

Similar News