சிவகாசி அருகே கணவர் தூக்கிட்டு தற்கொலை..

சிவகாசி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2024-06-28 16:52 GMT
சிவகாசி அருகே மனைவியுடன் தகராறு.கணவர் தூக்கிலிட்டு தற்கொலை..
சிவகாசி அருகே மனைவியுடன் தகராறு.கணவர் தூக்கிலிட்டு தற்கொலை.. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் நாடார் நந்தவனத் தெருவை சேர்ந்தவர் ட்ரை சைக்கிள் கூலி தொழிலாளி கண்ணன் (49) இவருக்கு சுமதி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். கண்ணன் நீண்ட நாட்களாக அலர்ஜியாலும் முதுகு வலியாலும் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதனால் வாஸ்து பிரச்சனையால் வீட்டை மாற்ற வேண்டும் என்று மனைவி சுமதி கூறியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கணவரைப் பிரிந்து சுமதியும் மகன்களும் தனியாக வசித்து வந்துள்ளனர்.இதனால் விரக்தி அடைந்த கண்ணன் வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீஸில் மனைவி சுமதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News