மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சர்ச்சையில் சிக்கிய பா.ஜ., நிர்வாகியை கைது செய்யக்கோரி சேலம் கோட்டை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-01-04 01:41 GMT

 சர்ச்சையில் சிக்கிய பா.ஜ., நிர்வாகியை கைது செய்யக்கோரி சேலம் கோட்டை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 

சேலம் மாவட்டம், ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தில் அமலாக்கத்துறை உதவியுடன் 2 விவசாயிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், அமலாக்கத்துறை உதவியோடு பா.ஜனதா நிர்வாகி ஒருவர் நிலத்தை அபகரித்து கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சர்ச்சையில் சிக்கிய பா.ஜனதா நிர்வாகியை கைது செய்யக்கோரி சேலம் கோட்டை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சண்முகராஜா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வெங்கடபதி, ராமமூர்த்தி, குணசேகரன், உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளை மிரட்டிய பா.ஜனதா கட்சி நிர்வாகி மீதும், அவருக்கு துணை போனதாக காவல்துறை, வருவாய்த்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கம்யூனிஸ்டு கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.
Tags:    

Similar News