மாசி திருவிழா முகூர்த்தக்கால் ஊன்றுதல்

திண்டுக்கல் மாவட்டம்,பழநி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா முகூர்த்தகால் நிகழ்வில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-10 08:45 GMT

மாசி திருவிழா

பழநி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா முகூர்த்தக்கால் ஊன்றுதலுடன் துவங்கியது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் கிழக்கு ரதவீதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இத்திருவிழா நேற்று சிம்ம லக்னத்தில் முகூர்த்தக்கால் ஊன்றுதலுடன் துவங்கியது.

தொடர்ந்து அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. வரும் பிப்.13ம் தேதி இரவு 7.30 மணிக்கு மேல் திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். பிப்.27ம் தேதி இரவு 7.15 மணிக்கு மேல் கன்யா லக்னத்தில் திருக்கல்யாணம் மற்றும் மாவிளக்கு பூஜைகள் நடைபெறும். பிப்.28ம் தேதி மாலை 4.30 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.

Tags:    

Similar News