நாமக்கல் கோயில்களில் மாசி மக சிறப்பு பூஜை

நாமக்கல்லில் உள்ள கோயில்களில் மாசி மகத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-25 03:06 GMT

மாசி சிறப்பு பூஜை

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காளியம்மன் கோவில், அனைத்து மாரியம்மன் கோவில்களில் பூச்சாட்டு விழா நடைபெற்று தினசரி சிறப்பு வழிபாடுகள், சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடந்து வருகிறது. தம்மண்ணன் வீதியில் உள்ள 24 மனை மாரியம்மன் கோவிலில் அம்மன் பாப்பாயம்மாள் அலங்காரத்திலும், பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மன் எலுமிச்சை மாலை சிறப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்.

உடையார்பேட்டை ராஜவினாயகர் கோவிலில் சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்து, மண்டலாபிஷேக விழா நடந்து வருகிறது. நேற்றைய வழிபாட்டில் சுவாமி கைகளில் வீணையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாசி மகம் நாளையொட்டி திருவள்ளுவர் நகர், மங்களாம்பிகை, மகேஸ்வரர் கோவிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

இதே போல் அனைத்து சமூக காளியம்மன் கோவில், கோட்டைமேடு காளியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், கள்ளிபாளையம் காளியம்மன், மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

Tags:    

Similar News