சிவகங்கையில் மே தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம்

சிவகங்கையில் மே தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது

Update: 2024-04-30 14:40 GMT

இரத்த தான முகாம்

மே தினத்தை முன்னிட்டு சிவகங்கை சிவில் இஞ்சினீயர் அசோசியேசன், சிவகங்கை சீமை கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய சங்கம், மதுரை சரவணா மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது.

சிவகங்கை சிவன்கோயில் அருகேயுள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற முகாமில், மருத்துவர் காயத்ரி தலைமையிலான மருத்துவக்குழுவினர், 105 -க்கும் மேற்பட்டோருக்கு இசிஜி, சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.

முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக சிவகங்கை எம்எல்ஏ- பி.ஆர். செந்தில்நாதன், நகர்மன்றத்தலைவர் சி.எம்.துரைஆனந்த், முன்னாள் எம்எல்ஏ- ராஜசேகரன், சிவகங்கை சீமை கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய சங்கத்தலைவர் ரவி, துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், செயலர் சரவணமுத்து, சிவகங்கை சிவில் இஞ்சினீயர் அசோசியேசன் சங்க நிர்வாகி சரவணமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News