இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் சார்பில் மே தின விழா கொடியேற்றம்

ராசிபுரத்தில் 138 வது மே தின விழாவையொட்டி இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் சார்பில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

Update: 2024-05-01 09:05 GMT
138 வது மே தின நாளில் இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் ராசிபுரம் நகர ஒன்றிய குழு சார்பில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் மற்றும் வி. நகர் பகுதியில் உள்ள CPI கட்சி அலுவலகத்தின் முன்பும் மே தின கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு நகர செயலாளர் S.மணிமாறன், தலைமை வகித்தார். நகர துணைச் செயலாளர் A.J.சாதிக், நகர துணை செயலாளர் A.கிருஷ்ணமூர்த்தி, முன்னிலை வகித்தனர். மேலும் தி.வி.க. நகர செயலாளர், பிடல் சேகுவேரா, NFIW மாவட்ட செயலாளர் S.மீனா, நகர பொருளாளர் P.சலீம், இளைஞர் பெருமன்றம் தலைவர் R.வேம்பு, மற்றும் A.C.ராஜா N.பையாஸ் மற்றும் இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News