மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி மகாபாரதி உடல் நலம் தேறினார்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-06-27 11:22 GMT

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழகத்தின் 38 வது மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாவட்டத்தின் இரண்டாவது மாவட்ட ஆட்சியராக ஏ.பி.மகாபாரதி பொறுப்பேற்று பணியில் உள்ளார். மாவட்டத்திற்கு தேவையான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக செய்து வரும் மாவட்ட ஆட்சியராக திகழ்ந்துவரும் ஏ.பி மகாபாரதி நேற்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டப் பணிகள் சார்பில் போஷன் பக்வாடா-2024 ஊட்டச்சத்து இருவார திருவிழா நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து நேற்று மதியம் முகாம் அலுவலகம் சென்றவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரை தஞ்சாவூரில் உள்ள மீனாட்சி மிஷன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அதன் பின்னர் இன்று அதிகாலை மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு ஆன்ஞ்சியோ கிராம் செய்து அடைப்புகள் சரி செய்யப்பட்டு நல்ல நிலையில் இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Tags:    

Similar News