மயிலாடுதுறை : களைகட்டிய கலை விழா..!

மயிலாடுதுறை அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான கலை திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Update: 2023-10-29 03:08 GMT

மாநில அளவிலான கலைத் திருவிழா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் உள்ள கலைமகள் கல்லூரியில் மாவட்ட அளவிலான கலை திருவிழா கடந்த 26 -ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாவட்டம் முழுவதிலும் உள்ள 489 அரசு பள்ளிகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் இந்தக் கலைத் திருவிழாவில் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

நடனம், பாட்டு, இசை, கவின் கலை, நுண்கலை, ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டி, நாடகம், கருவி இசை, மொழித்திறன் போட்டி, நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட தனி மற்றும் குழு திறனை வெளிப்படுத்தும் விதமாக  81 வகையான  போட்டிகள் கலைத் திருவிழாவில் நடத்தப்பட்டது.  மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 2051 மாணவ-மாணவியர் இந்த போட்டியில் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெற்றும் மாணவ-மாணவியர் சென்னையில் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News