மயிலாடுதுறையில் நவ.16 ல் கடைமுழுக்கு  - காவிரியில்  தண்ணீர் திறப்பு

மயிலாடுதுறை துலா உற்சவத்துக்காகக் கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் 1046 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2023-11-12 05:02 GMT

துலா உற்சவம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற துலா உற்சவமான கடைமுழுக்கு விழா, வரும்16-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இவ்விழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து புனிதநீராடுவர். கடந்த ஒருமாதகாலமாக காவிரிஆற்றில் தண்ணீர் வரவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்ததுடன் கடைமுக தீர்த்தவாரிக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட பக்தர்கள் கோரிக்கையும் விடுத்திருந்தனர். இதை ஏற்றுக்கொண்டு காவிரியில் தண்ணீர் திறந்துவிட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டார். அதன்படி கல்லணையிலிருந்து 1046 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்திற்கு காவிரிநீர் வந்து சேர்ந்தது. இதைக் கண்ட பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News