மாயூரம் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் முடிவு வெளியீடு

மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கத் தேர்தலில்‌ பொருளாளர், இணை செயலாளர், துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு. தலைவர் செயலாளருக்கான தேர்தலில் தலைவராக கலைஞரும், செயலாளாராக பிரவும் தேர்வு செய்யப்பட்டனர்

Update: 2024-06-22 11:51 GMT

தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்

மயிலாடுதுறை அமைந்துள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உள்ளிட்ட 8 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த நீதிமன்றங்களுக்கான மாயூரம் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது.

மாயூரம் வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் தலைவர் செயலாளர், பொருளாளர், இணை செயலாளர், துணைத் தலைவர் ஆகிய 5 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருந்த நிலையில், துணைத்தலைவர்கள், இணைச்செயலாளர், பொருளாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தலைவர் மற்றும் செயலாளருக்கான தேர்தல் வாக்குப்பதிவு காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெற்றது.

இந்த தேர்தலில் 201 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டதில் மாயூரம் வழக்கறிஞர் சங்க தலைவராக கலைஞரும் செயலாளாராக பிரவும் வெற்றி பெற்றனர். . இந்த தேர்தலையொட்டி நீதிமன்ற வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பெற்றி பெற்ற தலைவர் கலைஞர், செயலாளர் பிரபுவிற்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News