சோழவந்தான் நாச்சிகுளத்தில் மதிமுக 31ஆம் ஆண்டு தொடக்க விழா

சோழவந்தான் நாச்சிக்குளத்தில் மதிமுக 31ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

Update: 2024-05-26 15:52 GMT

மதிமுக 

மதுரை வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி மேற்கு ஒன்றியம் சார்பில், கொடியேற்று விழா நாச்சிகுளத்தில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் துரைப்பாண்டி தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் நந்தகுமார் இளைஞரணி ராஜா மாவட்ட பிரதிநிதி ஹக்கீம் முன்னிலையில், மாவட்ட செயலாளர் மார்நாடு கழக கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அலங்கை ஒன்றியச் செயலாளர் தண்டலை ரமேஸ், பிரதிநிதி நாராயணன், பாலமுருகன், விஷ்ணு வரதன், சுல்தான் மற்றும் கழக நிர்வாகிகள் பெருந்திரளானோர், கலந்து கொண்டனர். கிளைக்கழக செயலாளர் மூர்த்தி நன்றி கூறினார்.

Tags:    

Similar News