பூச்சி மருந்து குடித்து மெக்கானிக் தற்கொலை
கள்ளகுறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மதுபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராற்றில் மெக்கானிக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-02-11 08:13 GMT
தற்கொலை
சின்னசேலம் அடுத்த நைனார்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார், 48; 'டிவி' மெக்கானிக். குடிப் பழக்கம் உடைய இவர், மதுபோதையில் அவரது மனைவி சித்ராவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி தகராறு செய்த அவர், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
உடன் அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.