அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு மன நல ஆலோசனை

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டது.

Update: 2024-05-09 14:25 GMT

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு மன நல ஆலோசனை

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம் முதன்மை மருத்துவ அலுவலர் பாரதி அவர்களின் முன்னிலையில் இன்று நடைபெற்றது. தாய்மார்கள் கவலைகளை மறந்து இருப்பது அவசியம் மேலும் தாயின் கருவறையில் குழந்தையின் வளர்ச்சி தாயின் மனநிலை பொறுத்தே அமைகின்றது கவலைகளும் கோபங்களும் துக்கங்களும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய காரணமாக மாறுகின்றது.

குழந்தை ஆரோக்கியமாகவும் மனவளர்ச்சி முழுமையாக அடைய தாய்மார்கள் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் ஆகவே பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தின் சார்பாக பிரம்மா குமாரி சகோதரி தீபிகா அவர்கள் இந்த மனநல ஆலோசனையையும் தியான பயிற்சியும் வழங்கினார். இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Tags:    

Similar News