மனநல நல்லாதரவு மன்ற விழா
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மனநல நல்லாதரவு மன்ற விழாவில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.;
Update: 2024-03-09 05:16 GMT
மனநல நல்லாதரவு மன்ற விழா
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று நடந்த மனநல நல்லாதரவு மன்ற விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) நேரு தலைமை தாங்கினார். டாக்டர்கள் பழமலை, சமீம், பொற்செல்வி, அனுபமா, பேராசிரியர் செல்வராஜ், நிர்வாக அலுவலர் அசோகன் சிறப்புரையாற்றினர். விழாவில் மன அழுத்தம் மற்றும் மனம் சம்பந்தமான அனைத்திற்கும் ஆலோசனை, சிகிச்சை முறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.