மார்த்தாண்டம்: கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை.

மார்த்தாண்டம் அருகே உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த கொத்தனார் மன வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2024-05-15 06:15 GMT

கோப்பு படம்

மார்த்தாண்டம் அருகே பம்மம் நிரவுவிளையை சேர்ந்தவர்ரத்தினதாஸ். கொத்தனார். இவருடைய மனைவி சாவித்திரி. இவர் ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர்க ளுக்கு 2 மகன்கள் உள்ளனர். ரத்தினதாஸ் கடந்த 5 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ் பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனால் அவர் வேலைக்கு செல்ல முடியாமல் மிகுந்த மனவேதனையில் இருந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த ரத்தினதாஸ் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உறவினர்கள் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம் பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News