அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

செங்கல்பட்டு அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாட்டப்பட்டது.

Update: 2024-01-18 06:55 GMT
அதிமுக சார்பில் எம்ஜிஆர் -ன் பிறந்த நாள் விழா

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், மாம்பாக்கம், கடப்பேரி, ஊத்துக்குழி உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.. மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள எம்ஜிஆரின் உருவ சிலைக்கு, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு மாலை அணிவித்து படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் அதிமுக கொடிக்கம்பத்தில் கழக கொடி ஏற்றி வைத்து கேக் வெட்டி வெகு விமர்சையாக பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது... அப்போது ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலை பொதுமக்களுக்கு அன்னதானங்கள் இனிப்புகள் வழங்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகர அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் எம்பி சீனிவாசன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் செல்லப்பாண்டியன், மதுராந்தகம் நகர கவுன்சிலர் தேவி வரலட்சுமி கோபிநாத், மற்றும் அதிமுக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News